திலக் மாரப்பன
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திலக் மாரப்பன (Tilak Marapana) இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். சட்டம், ஒழுங்கு, மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராகவும், பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும், சட்டமா அதிபராகவும் பதவி வகித்தவர்.[1]
Remove ads
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
மாரப்பன இரத்தினபுரியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி பி. மாரப்பனவின் மகன் ஆவார். கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் வேதியியல், கணிதம், மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.[2]
சட்டப் பணி
மாரப்பன இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் 1968 ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார்.[2] 1988 இவர் சனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.[2] 1992 முதல் 1994 வரை சட்டமா அதிபராகப் பணியாற்றினார்.[3]
அரசியலில்
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2002 இல் போக்குவரத்துத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. 2015 இல் தேசியப் பட்டியலில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] மைத்திரிபால சிறிசேனவின் அரசில் இவருக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர் பதவி 2014 செப்டம்பர் 4 இல் வழங்கப்பட்டது. இவர் அவன்காட் (மிதக்கும் ஆயுதக்கப்பல்) விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளையடுத்து 2015 நவம்பர் 9 இல் பதவி விலகினார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads