தெய்வ தசகம்

இந்து சமயப் பிரார்த்தனைப் பாடல்கள் From Wikipedia, the free encyclopedia

தெய்வ தசகம்
Remove ads

தெய்வ தசகம் (Daiva Daśakam) என்பது இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் நாராயண குரு சுமார் கி.பி.1914 இல் எழுதிய ஒரு பிரார்த்தனைப் பாடல்களாகும் ஆகும். இந்தக் கவிதை எந்த குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட தெய்வத்தையும் குறிக்கவில்லை. மாறாக, அது அத்வைத தத்துவத்தில் வேரூன்றிய ஒரு உலகளாவிய, இரக்கமுள்ள கடவுள் கருத்தைத் தூண்டுகிறது. கடவுள் படைப்பாளர் மட்டுமல்ல, படைப்பும் அவரே என்றும், பிரபஞ்சத்தின் பொருள் காரணமும் அவரே என்றும் இது வலியுறுத்துகிறது.[1][2] 2009 ஆம் ஆண்டில், கேரள அரசு இது இந்தியாவின் தேசிய பிரார்த்தனையாக மாற வேண்டும் என்று பரிந்துரைத்தது.[3] இது குறைந்தது 100 மொழிகளிலும் எழுத்துக்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[4]

Thumb
(குரு நடராஜ குருவை சந்நியாசி ஆவதற்கு முன்பு கேட்டார், "வேதாந்தத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?" குருவின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நடராஜர், 'ஆம்' என்று சொல்லக்கூட மறந்துவிட்டார்). "குரு: நீங்கள் தண்ணீரைப் பார்த்தீர்களா? நடராஜ குரு: ஆம் குரு: அந்த அலையும் தண்ணீர்தான் தெரியுமா? நடராஜ குரு: எனக்குத் தெரியும் குரு: அப்படியானால் புதிதாகத் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை. வேதாந்தம் அப்படித்தான்.

இந்த படைப்பு அத்வைத வேதாந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பத்து பாடல்களைக் கொண்டுள்ளது. நாராயண குரு இதை அலுவா அத்வைத ஆசிரமத்தில், பல்வேறு சாதி மற்றும் மதக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இயற்றினார்.[5] மொழி மற்றும் கருத்து அடிப்படையில் மிகவும் பிரமாண்டமான பல தத்துவப் படைப்புகளை முடித்த பிறகு, குரு தனது அறுபதுகளில் அதுவரை உணர்ந்த தரிசனங்களை உள்ளடக்கிய, ஒப்பீட்டளவில் மென்மையான மொழியில் இந்தப் படைப்பை எழுதியுள்ளார். மொழி எளிமையானதாக இருந்தாலும், படைப்பு அர்த்தமுள்ள வெளிப்பாடுகளால் நிறைந்துள்ளது.[6] தெய்வ தசகம் என்பது கேரளாவில் சமூக பிரார்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கவிதைகளில் ஒன்றாகும்.[7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads