தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)

From Wikipedia, the free encyclopedia

தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)
Remove ads

தேவகோட்டை தமிழிசை மாநாடு, என்பது தேவகோட்டையில் 1941-ஆம் ஆண்டு நடந்த தமிழ் இசை மாநாடு ஆகும். இஃது இரண்டாவது தமிழிசை மாநாடு என்றும் அழைக்கப்படுகிறது.

Thumb
1941-இல் தேவகோட்டையில் நடந்த தமிழிசை மாநாடு புகைப்படம்.

தமிழிசை இயக்கம்

சங்ககாலத்தில் தமிழிசை  சிறப்புற்று இருந்தது. பின்னர்ப் பக்தி காலத்திலும் தேவாரங்கள், பிரபந்தங்கள் ஊடாகத் தமிழிசை சிறப்புற்று இருந்தது. ஆனால் கி.பி14-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு தெலுங்கு விஜயநகர ஆட்சிக்கு உட்பட்டது. இதன் காரணமாக தெலுங்கு மொழி இசையில் முக்கிய இடம் பிடிக்கத் தொடங்கியது. தமிழர் இசை மரபு தெலுங்கு இசையினுள் உள்வாங்கப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டிலும் இந்த நிலையே தொடர்ந்தது. இசையரங்குகளில் தெலுங்கு அல்லது பிற மொழிகளிலேயே பாடல்கள் பாடப்பட்டன.இறுதியில் மட்டுமே இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் 'துக்கடா' என்ற பெயரில் பாடப்பட்டு வந்தன.[1]

இந்தச் சூழ்நிலையில் தமிழ் இசையை வளர்ப்பதற்குத் தோன்றியதே தமிழிசை இயக்கம்.

Remove ads

தமிழிசை மாநாடு

முதல் தமிழிசை மாநாடு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் 1941-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்தது.[2] [3] இதைத் தொடர்ந்து அதே ஆண்டு  இரண்டாம் தமிழிசை மாநாடு டி.ஆர்.அருணாச்சலம், சின்ன அண்ணாமலை ஆகியோரின் முயற்சியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் நிதி உதவியுடன் தேவகோட்டையில் நடந்தது.[3] பின்னர் அதே ஆண்டு காரைக்குடியிலும் நடந்தது.[2]

கலந்துகொண்ட கலைஞர்கள்

  • நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
  • மதுரை மணி
  • திருச்சி சகோதரர்கள்
  • சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை
  • மாரியப்ப சுவாமிகள்
  • வினைதீர்த்தான் செட்டியார்
  • சரஸ்வதிபாய் அம்மாள்
  • தியாகராஜ பாகவதர்
  • ம. ச. சுப்புலட்சுமி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads