Remove ads

தொல்காப்பியம் என்னும் பண்டைய நூலில் வாழ்க்கையை விளக்கும் இலக்கியப் பாங்கினை வகைப்படுத்தி நெறிமுறை இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அவற்றில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியன அகப்பொருள் பற்றியவை. இவற்றில் அகப்பொருளின் பொதுவான அடிப்படைக் கூறுகள் அகத்திணை இயலில் கூறப்பட்டுள்ளன. களவியலில் காதலன்-காதலியர் வாழ்க்கை நெறிகளும், கற்பியலில் திருமணத்திற்குப் பின்னர் கணவன்-மனைவியரிடையே நிகழும் வாழ்க்கை நெறிகளும் தொகுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. [1] இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்கள் எதனை, எந்த நூற்பாவில் உணர்த்துகின்றன என்பதை இங்கு அகரவரிசைத் தொகுப்பில் காணலாம்.

குறியீட்டுக்குறுக்க விளக்கம்
அக=அகத்திணையியல்
எண்=இந்த இயலில் வரும் நூற்பா வரிசை எண்
Remove ads

அ வரிசை

  1. அடியோர் - அடிமைத்தொழில் செய்வோர் – அக 25
  2. உணா - நிலத்தில் விளையும் உணவு – அக 20
  3. உயர்ந்தோர் - நாற்குலத்தில் உயர்ந்த அந்தணர் – அக 28
  4. உரிப்பொருள் - திணைக்கு உரிய நடத்தை – அக 3
  5. உள்ளுறை உவமம் - தலைவன் தலைவியரின் பாங்கு புலப்படும் வகையில் இயற்கை நிகழ்வை மட்டும் கூறுதல் – அக 49, 50, 51
  6. ஊதியம் - வருவாய் – அக 44
  7. எஞ்சியோர் - பிற அகப்பொருள் மாந்தர். – அக 45
  8. எழுதிணை - கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை. – அக 1
  9. ஏனோர் - தினைநிலைப்பெயர் அன்றிப் பிறர், குறவன், குறத்தி, குறிஞ்சிநில மக்கள் – அக 24
  10. ஏனோர் - தன்னை ஒத்த பிறர் – அக 24
  11. ஏனோர் படிமைய - வழிபாடு – அக 30
  12. ஏனோர், ஏவல் மரபின் ஏனோர் - தொழில் செய்ய ஏவப்படுபவர் – அக 26
  13. ஐந்திணை, அகன் ஐந்திணை, - அகப்பொருள் மாந்தரின் பெயர் இதில் கூறப்படுவது இல்லை – அக 57
  14. ஐந்திணை, நடுவண் ஐந்திணை - முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், - அக 2
  15. ஓதல் - வேதம் ஓதுதல் – அக 27
Remove ads

க வரிசை

  1. கருப்பொருள் - தாய் வயிற்றுக் கருவைப் போல நிலத்திணையின் கருவாக உள்ளவை – அக 3
  2. கலந்தபொழுது காட்சி - பிரிந்த தலைவனைத் தலைவி காணும் காட்சி – அக 18
  3. குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருள் – அக 16
  4. குறிஞ்சி - மைவரை உலகம், - அக 5
  5. கைக்கிளை - ஏழு திணைகளில் ஒன்று – அக 1
  6. கைக்கிளை - காம உணர்வு மிகாத ஒருத்தியை விரும்பிய ஒருவன் தன் பெருமையைப் பற்றியும், அவள் அழகைப் பற்றியும் அவளிடம் பேசி அவளிடமருந்து விடை பெறாமல் ஏங்கும் ஒருதலைக் காமம் – அக 53
  7. கைக்கிளை - தன் ஆசைக்கு இணங்காவிட்டால் மடலேறுவேன் எனல் – அக 55
  8. கொண்டுதலைக் கழிதல் - தலைவன் தலைவியைத் தன் ஊருக்குக் கொண்டு செல்லல் – அக 17
  9. கௌவை, கற்பொடு புணர்ந்த கௌவை - தலைவனிடன் சென்ற தலைவியை அவளது தமர் அவளை மீட்டுக்கொண்டு செல்லும் காலத்துத் தலைவன் மனம் கலங்கிப் பேசுதல் – அக 44
Remove ads

ச வரிசை

  1. செய்தி - நிலத்தவர் செய்யும் தொழில் – அக 20
  2. சேயோன் - மைவரை உலகத்தின் தெய்வம், - அக 5

த வரிசை

  1. தாளாண் பக்கம் - முயன்று பொருள் தேடுதல் – அக 44
  2. திணை மயக்கம் - நிலம் மயங்காது – அக 14
  3. திணை மயக்கம் - உரிப்பொருள் மயங்காது – அக 15
  4. திணைநிலைப் பெயர் - ஆ மேய்ப்போர் ஆயர், வேட்டையாடுவோர் வேட்டுவர் என்பது போல் அமைவன. – அக 22, 23
  5. தூது - அரசன் விடும் தூது – அக 27
  6. தூது - வேந்து வினை இயற்கை – அக 34
  7. தெய்வம் - நிலத்தெய்வம் – அக 20
  8. தெய்வம், மொழிப்பொருள் தெய்வம் - பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படும் தெய்வம் – அக 39
Remove ads

ந வரிசை

  1. நிமித்தம் - முன் அறியும் குறி – அக 39
  2. நெய்தல் - எற்பாடு பொழுது – அக 10
  3. நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருள் – அக 16
  4. நெய்தல் - பெருமணல் உலகம், - அக 5

ப வரிசை

  1. பரத்தை - பலருக்கு உடலின்பம் தருபவள், தலைவன் இவளிடம் செல்வான். மனைவியிடம் #மீள்வான். மனைவி ஊடுவாள். தலவன் பணிவான். தேற்றுவான். – அக 44
  2. பறை - நிலத்தவர் முழக்கும் பறை – அக 20
  3. பாங்கர், பாங்கோர் பாங்கு - தலைவனின் துணைவர் – அக 44
  4. பாலை - நடுவுநிலைத் திணை, நண்பகல் பொழுது, வேனில் பருவம், பின்பனியும் – அக 11, 12
  5. பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருள் - அக 16
  6. பிரிவு (இரு வகை) - கொண்டுதலைக் கழிதல், பிரிந்து அவண் இரங்கல் – அக 13, 17
  7. புலன் நெறி வழக்கம் - இலக்கண நெறி வழக்கம் – அக 56
  8. புள் - நிலத்தில் மேயும் பறவை – அக 20
  9. பெருந்திணை - ஏழு திணைகளில் ஒன்று. – அக 1
  10. பெருந்திணை - மடல் எறி வந்து ஊரார் உதவியால் ஒருத்தியைப் பெறுதல், இளமை தீர்ந்த முதியவளிடம் உடலுறவு கொள்ளுதல், தன் வலிமையால் இழுத்து உடலுறவு கொள்ளல் ஆகியவை – அக 54
  11. பொருள், ஒண்பொருள் - ஒளி தரும் பொருள் – அக 30
Remove ads

ம வரிசை

  1. மரம் - நிலத்துக்கு உரிய மரம் – அக 20
  2. மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருள் – அக 16
  3. மருதம் - தீம்புனல் உலகம், - அக 5
  4. மருதம் - வைகறை விடியல் என்னும் இரு பொழுதுகளும் – அக 9
  5. மா - நிலத்தில் திரியும் விலங்கினம் – அக 20
  6. மாயோன் - காடுறை உலகின் தெய்வம். – அக 5
  7. முதற்பொருள் - நிலம், பொழுது – அக 3, 4
  8. முந்நீர் வழக்கம் - கடலில் செல்லுதல் – அக 37
  9. முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் உரிப்பொருள், - அக 16
  10. முல்லை - காடுறை உலகம், - அக 5
  11. முல்லை - கார்ப்பருவம் மாலைக்காலம், - அக 6
  12. முல்லை - பனி-எதிர் (கூதிர்) பருவமும் – அக 7
  13. மேலோர் - அந்தணர் – அக 31
Remove ads

யா

  1. யாழின் பகுதி - நிலத்தவர் மீட்டும் யாழ்ப்பண் – அக 20

வ வரிசை

  1. வருணன் - பெருமணல் உலகத்தின் தெய்வம். – அக 5
  2. வழக்கம் - மூன்று வகை, நாடக-வழக்கு, உலகியல் வழக்கு, பாடல் சான்ற புலன்நெறி வழக்கு – அக 56
  3. வன்புறை - வற்புறுத்தல் – அக 42
  4. விழுமம் - இன்பம், துன்பம் – அக 42
  5. வினைவலர் - கைவினைக் கலைஞர் – அக 25
  6. வேந்தன் - தீம்புனல் உலகத்தின் தெய்வம், இந்திரன் என்பது இளம்பூரணர் உரை. – அக 5
  7. வையம் (நிலம்) - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், - அக 2

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads