நஞ்சீயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நஞ்சீயர் எனும் வைணவப் பெரியவர் திருநாராயணபுரம் (தற்போதைய மேல்கோட்டை) எனும் ஊரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மாதவர் எனும் இயற்பெயரோடு பிறந்தார். 12-ஆம் நூற்றாண்டின் சிறந்த வைணவத் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். வைணவத் தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புக் கணிசமானது..[1]
Remove ads
வாழ்க்கைக்குறிப்பு
மாதவாச்சாரியர் எனும் சிறந்த அத்வைதி ஆகிய இவரைப் பராசர பட்டர் மூலம் விசிஷ்டாத்வைத கொள்கைக்கு மாற்றியருளினார் இராமானுசர். பராசர பட்டருக்குச் சீடராக அவருடனே திருவரங்கம் சென்று இலக்கிய பணிகளை மேற்கொண்டார்.
பிறபெயர்கள்
- நஞ்சீயர் ( பராசர பட்டர் வழங்கியது)
- நிகமாந்த யோகி
- வேதாந்தி
இலக்கிய படைப்புகள்
- திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வியாக்கியானம்
- கண்ணிநுண் சிறுதாம்பு வியாக்கியானம்
- திருப்பாவை ஈராயிரப்படி
- திருவந்தாதி வியாக்கியானம்
- திருப்பல்லாண்டு வியாக்கியானம்
- ரகஸ்யத்ரயவிவரணம் வியாக்கியானம்
- நூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம்
சிறப்பு
தன் வாழ்நாளில் திராவிட வேதமாகிய நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அங்கமாகிய திருவாய்மொழிக்கு நூறு முறைக்குமேல் காலட்சேபம் செய்தருளினார் என்பது இவரின் சிறப்பு.
மேற்கோள்கள்
கருவிநூல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads