நளன், இராமாயணம்

From Wikipedia, the free encyclopedia

நளன், இராமாயணம்
Remove ads

நளன், இராமாயணம் குறிப்பிடும் வானர மன்னர் சுக்கிரீவனின் படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்க வேண்டி, நீலனின் துணையுடனும், நளன் வானரக் கூட்டத்தின் உதவியுடனும் நளன் கடலில் இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவினான். [1][2] [1]

Thumb
நளன்
Thumb
கடற்பாலம் கட்டுவது தொடர்பாக நளன் (வெள்ளை நிறம்) மற்றும் நீலன் (நீல நிற வானரம்), இராமரிடம் உரையாடுதல்
Thumb
இராமர் பாலம் அல்லது நள சேது

நளனின் தலைமையில் கடற்பாலம் கட்டப்பட்டதால், இந்த கடற்பாலத்திற்கு நள சேது என்பர்.[3]

இராம-இராவணப் போரில் நளன் பல அரக்கர்களைக் கொன்று குவித்தார். போரில் ஒரு முறை இந்திரஜித்தின் கூரிய அம்பால், நளன் பலத்த காயமடைந்து மயங்கி வீழ்ந்தான்.[4] அரக்கர் படைத்தலைவரான தபனனை, நளன் கொன்றார். [5]

Remove ads

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads