நளவர்
இருட்டடிப்பு செய்ய நினைக்கும் கூட்டங்களே,நாடார்கள் தான் நளவர்கள். From Wikipedia, the free encyclopedia
Remove ads
நளவர் என்போர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள சாதிகள் பெருமளவுக்குத் தமிழ் நாட்டில் உள்ள சாதிகளோடு ஒத்திருந்தாலும், நளவர் என்னும் சாதியினர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் மட்டும் காணப்படுகின்றனர். தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்ட இச்சாதியினர்[1] உயர் சாதியினரால் மிகவும் ஒடுக்கப்பட்டனர். இவர்கள் கல்வி கற்பதற்கும், கோவிலுக்குள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.[சான்று தேவை] மரபுவழியாக இவர்களுடைய தொழில் பனை ஏறுதலும், கள் இறக்குதலும் ஆகும். பிற்காலங்களில் வேளாண்மைக் கூலிவேலையிலும் இவர்கள் ஈடுபட்டனர். அம்பட்டர், பறையர், வண்ணார், நளவர் ஆகியோர் பஞ்சமர் என அழைக்கப்பட்டனர்.
Remove ads
தோற்றம்
தமிழ் நாட்டில் "நளவர்" என்னும் பெயரில் ஒரு சாதி இல்லை என்பதால், இச்சாதி இலங்கையிலேயே தோன்றியது என்ற கருத்து நிலவுகின்றது. யாழ்ப்பாண அரசுக் காலத்தில் வேளாண்மைக் கூலிகளாகத் தொழில் செய்வதற்காக சோழ நாட்டைச் சேர்ந்த பள்ளர் குடிகள் சிலர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும், நினைத்தபடி தொழில் அமையாததால் இவர்களிற் சிலர், சாணார் சாதியினரின் தொழிலான பனையேறும் தொழிலைப் பயின்று தொழில் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.[2] தமது வழமையான தொழிலில் இருந்து நழுவியதால் இவர்களுக்கு நளவர் எனப் பெயர் ஏற்பட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads