நாகநந்தா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகானந்தா (தேவநாகரி: नागानन्द) (பொருள் - நாகங்களின் மகிழ்ச்சி) என்பது பேரரசர் ஹர்ஷர் (கி.பி. 606 - 648 ஆட்சி செய்தவர்) எழுதிய ஒரு சமஸ்கிருத நாடகமாகும்.[1] நாகானந்தா ஐந்து அத்யாயங்களைக் கொண்டது, இது மிகவும் பாராட்டப்பட்ட சமஸ்கிருத நாடகங்களில் ஒன்றாகும். இது ஜிமூதவாஹன என்ற தெய்வீக மந்திரவாதிகளின் (வித்யாதரர்கள்) இளவரசனின் பிரபலமான கதையையும், நாகங்களைக் காப்பாற்ற அவன் செய்த தன்னலமற்ற தியாகத்தையும் சொல்கிறது.

Remove ads

கதை

இளவரசன் ஜிமூதவாஹனன் ஒரு நாக இளவரசனை தெய்வீக கருடனுக்கு பலி கொடுப்பதை நிறுத்த தன் உடலையே தியாகம் செய்த கதையாகும். ஹர்ஷரின் நாகானந்தா நாடகம் போதிசத்துவ ஜீமூதவாஹவனனின் கதையைச் சொல்கிறது, மேலும் ஆரம்பத்தில் உள்ள வேண்டுதல் பாடல் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அதில் மாரரை வெற்றி கொள்ளும் செயலில் அவர் விவரிக்கப்படுகிறார் (அந்த இரண்டு பாடல்கள், மூன்றாவது பாடலுடன் சேர்ந்து, மாரஜித்-ஸ்தோத்ர என்று திபெத்திய மொழிபெயர்ப்பில் தனியாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன). சிவனின் துணைவி கௌரி இந்த நாடகத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறாள், மேலும் தன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி வீரனை உயிர்ப்பிக்கிறாள்.

Remove ads

பெளத்தத்தின் கூறுகள்

இந்த நாடகம் பௌத்த தர்மத்தின் தாக்கத்தையும் கொண்டுள்ளது, ஏனெனில் இதில் புத்தர் மற்றும் பாம்பு வழிபாட்டின் கூறுகள் காணப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

கதை: வித்யாதர இளவரசன் ஜிமுதவாகனன், நாகர்களைக் காக்க தன்னுயிரை அர்ப்பணிக்கிறான். கருப்பொருள்: தியாகம், கருணை, ஆன்மீகம் மற்றும் பௌத்த தர்மம். நாடக வகை: ஐந்து அத்யாயங்கள்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads