நாகம் (சொல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகம் என்னும் பெயர்ச்சொல் தரும் பொருள்களை ஆசிரிய நிகண்டு பட்டியலிலுகிறது.[1]

விண்
நாகத்து அன்ன பாகார் மண்டிலம் (விண்ணைப போல உருகும் மண்டிலம்) [2]
குரங்கு
புன்னை
நற்றூசு (நல்லாடை)
  • கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் தனக்குக் கிட்டிய நீலநாகம் உரித்த தோலைத் தான் அணிந்துகொள்ளாமல் தன் நாட்டுக் குற்றால நாதருக்கு அணிவித்து மகிழ்ந்தானாம்.[3]
  • நாகம் என்பது நடனமாடும் மகளிர் இடையில் உணுத்திக்கொள்ளும் ஆடையில் படமெடுதாடும் நாகம் போல் கொய்சகத்தால் செய்துகொள்ளும் ஓர் ஆடை-ஒப்பனை.[4]
மலை
பாம்பு
யானை
  • நாகம் (யானை) ஏந்தெழில் வரிநுதல் பொருது ஒழி நாகம் (யானைக்கோட்டால் அரசியின் கட்டில் கால்) [5]
  • இருங்கோள் நாகம் மடிபதம் பார்க்கும் வயமான் (யானை எப்போது சாகும் எனக் காத்திருக்கும் அரிமா(சிங்கம்) [6]என்பன அவை.
உலோகம்
கம்பர்

இதனை வைத்துக்கொண்டு கம்பன் தன் கம்பராமாயணத்தில் விளையாடுகிறான்.[7][8] நாகம் என்னும் மலையானது, நாகம் வாழும் பாதாள உலகை அடையும்படி, நாகம் என்னும் விசும்பாகி நின்றான் – என்கிறான்.

Remove ads

நாகநாடு

புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூற்றப்படும் தெய்வம் இது.

நாகபுரம்

நாகபுரம் என்பது ஆபுத்திரன் ஆண்ட நாட்டின் தலைநகர்.

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads