நாஞ்சில் நாரண. தொல்காப்பியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் (பிறப்பு: சூலை 9, 1943) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ஆர். நாராயணன், தாய் அன்னவடிவு. கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நா. அரிராமகிருஷ்ணன். நாளைய புரட்சி, தமிழுக்குத் தலை (குமணன் காவியம்) எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். சிறந்த கவிஞர். மரபுக் கவிதைகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர். இவர் எழுதிய "முப்பால் முதல்வன்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads