நாட்டார்மங்கலம், உசிலம்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாட்டார்மங்கலம் (Nattarmangalam), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த நாட்டார்மங்கலம் ஊராட்சியில்[1] உள்ள ஒரு கிராமம் ஆகும். மேலும் இது உசிலம்பட்டி வட்டத்தின் சிந்துபட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஒன்றாகும்.[2] நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
செல்லம்பட்டியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் நாட்டார்மங்கலம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 481 வீடுகள் கொண்ட நாட்டார்மங்கலம் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,731 ஆகும். சராசரி எழுத்தறிவு 73.39%. மக்கள் தொகையில் பட்டியல் சமூத்தினர் 691 ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads