நா. முருகானந்தம்

என்பவர் தமிழ்நாடு அரசின் ஐம்பதாவது தலைமைச் செயலாளராவார் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நா. முருகானந்தம் என்பவர் தமிழ்நாடு அரசின் ஐம்பதாவது தலைமைச் செயலாளராவார்.[1]

விரைவான உண்மைகள் நா. முருகானந்தம், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு ...

இவர் சென்னையைச் சோ்ந்தவர். இவர் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் ஐ.ஐ.எம்., லக்னோவில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.[2] 1991-ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தோ்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கினார்.[3] கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராகவும், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளா் பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளாா். 2021 டிசம்பரில் கூடுதல் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்று முதல்வரின் தனி பிரிவுச் செயலாளா் 1-ஆக பணிபுரிந்து வந்தார்.[4] பின்னர் 2024 ஆகஸ்ட்டில் தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads