நியமம் (ஊர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியமம் என்னும் சொல் பெருநகரத் தெருக்களில் இருபுறமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மாடங்களைக் குறிக்கும். [1] [2]
எனினும் சேரநாட்டில் குன்றுகள் சூழ்ந்த பகுதியில் நியமம் என்னும் பெயர் பூண்ட ஊர் ஒன்று இருந்தது எனக் கொள்ள இடமுண்டு. [3]
இவ்வூரில் கடல், மலை, ஆறு ஆகியவற்றின் வளங்கள் பல்கிக் கிடந்தன. [4]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் சொல்கெழு குட்டுவன் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் சேரமன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டுச் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த இந்த ஊரைச் சேரமான், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போரிட்டு அழிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.[5]
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads