நூற்றொகை விளக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூற்றொகை விளக்கம் என்பது 1888-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலைப் பேராசிரியர் பெ. சுந்தரனார் எழுதினார். இந்த நூலில் "இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதனின் அறிவு வளர கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என்று பல்வேறு துறைகளை அக்காலத்தில் வழங்கிய சொற்களைக் கொண்டு விளக்குகிறார்."[1] அக்காலத்தில் வளர்ச்சி பெற்ற பல் துறை அறிவியல் துறைகளைப் பற்றிய விளக்கங்களைத் தொகுத்து வகுத்துத் தருவதில் இஃது ஒரு முன்னோடி நூல்.
Remove ads
அமைப்பு
இந்த நூல் 38 சூத்திரங்களைக் கொண்டது. ஓவ்வொரு சூத்திரமும் ஒரு துறையைப் பற்றியது. இந்த நூலில் பல புதிய கலைச்சொற்கள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads