நெடுங்கள நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெடுங்கள நாடு என்பது பாண்டிய நாட்டின் 100 பிரிவுகளில் ஒன்று. தற்போது உள்ள , பெரியகுளம் வட்டாரம் நெடுங்களநாடு என்று அழைக்கப் பட்டது.[1] சங்ககாலத்தில் அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவன் இப்பகுதியை ஆண்டான்[2]. இந்த நாடு அதியமான்களின் பூர்வீக இடமாக அறியப் படுகிறது. அதிகமான் நெடுமிடல் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் படைத்தலைவனும் ஆவான். [3]அவனது படையில் இருந்த புகழ் மிக்க வீர்கள் இந்தநாட்டுப் பகுதியில் இருந்தவர்கள்.
பாண்டியர்களின் பிரதிநிதியாகவே படையெடுத்துச் சென்று தகடூரை கைப்பற்றி தற்போதைய தர்மபுரி பகுதியில் அதியமான்கள் நிலையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
சங்க இலக்கியங்களில் நெடுங்களத்துப் பரணர் என்ற பெயர் காணப்படுகிறது. இப்புலவர் நெடுங்கள நாட்டினை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இந்தப் பகுதியில் தான் புலிமான்கோம்பை, தாதபட்டி போன்ற இடங்களில் இந்தியாவிலேயே பழமையான தமிழி கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads