நெடும்பல்லியத்தனார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெடும்பல்லியத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.இவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடையைப் புகழந்து பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 64[1] எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. இந்த ஒரு பாடலைத் தவிர வேறு பாடல் இவர் பெயரில் இல்லை.

பாடல் சொல்லும் செய்தி

  • விறலியாற்றுப்படை

குடுமிக் கோமான் களிற்றுப் படையுடன் சென்று பகைப்புலத்தில் போரிட்டுக்கொண்டிருக்கிறான்.

விறலி! நம்மிடம் உள்ள யாழ், ஆகுளி, பதலை முதலான இசைக்கருவிகளுடன் நாம் போர்களத்துக்கே சென்று அவனைப் பாடிப் பரிசில் பெறச் செல்லலாமா? என்கிறார் புலவர்.

குடுமிக் கோமான்

குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். குடுமி என்னும் இந்த ஊரை மீட்டுக்கொண்ட பாண்டியன் குடுமிக் கோமான் எனப்பட்டான்.

பல்யாகசாலை

குடுமியான்மலை வெற்றிக்குப் பின்னர் இவன் பல யாகசாலைகள் அமைத்து மக்களுக்குத் தொண்டு புரிந்தான்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads