பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை
பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை அல்லது பெங்களூர் மத்தியச் சிறைச்சாலை கர்நாடகா மாநிலத்தின From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை அல்லது பெங்களூர் மத்தியச் சிறைச்சாலை (Central Prison, Bangalore) கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்த பெரிய சிறைச்சாலை ஆகும். [1]இச்சிறைச்சாலை பெங்களூர் – ஒசூர் சாலையில் உள்ள பரப்பன அக்ரகாரம் எனுமிடத்தில் 1997-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலையை, 2000-ஆம் ஆண்டில் மத்தியச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.[2][3] 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சிறைச்சாலையில் 2,200 சிறைவாசிகளை தங்க வைக்க வசதியுள்ளது. இச்சிறைச்சாலையில், 2016-ஆம் ஆண்டில் 4,400-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இச்சிறையில் பெண் சிறைவாசிகளையும் தங்க வைக்க வசதி உள்ளது.[4] கர்நாடக மாநில நீதிமன்றங்களின் விசாரணை கைதிகளும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் இச்சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்கள்.
Remove ads
அமைவிடம்
பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை என்றழைக்கப்படும் பெங்களூர் மத்திய சிறைச்சாலை கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு – ஓசூர் சாலையில், ஓசூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[5]
குறிப்பிடத்தக்க சிறைக்கைதிகள்
இச்சிறையில் பல முக்கிய தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். [6] அவர்களில் சிலர்:
- பி. எஸ். எடியூரப்பா முன்னாள் முதல்வர் கர்நாடகா மாநிலம்
- ஜெனர்தன ரெட்டி, சுரங்கங்களின் அதிபர், கர்நாடகா
- கிருஷ்ணய்ய செட்டி, முன்னாள் அமைச்சர், கர்நாடகம்
- ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு
- வி. கே. சசிகலா, பொதுச்செயலாளர், அதிமுக
- ஜெ. இளவரசி, வி. கே. சசிகலாவின் அண்ணன் மனைவி
- வி. என். சுதாகரன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads