பலியா மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பலியா மாவட்டம் (Hindi: बलिया ज़िला, Urdu: بالیا ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் ஆசம்கர் கோட்டத்தின் கீழ் உள்ளது.இது உத்தரப் பிரதேசத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பலியா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் வணிகச் சந்தையாகும்.
Remove ads
வரலாறு
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் போரின் நாயகருமான மங்கள் பாண்டே இவ்வூரில் பிறந்தவர் ஆவார். முன்னாள் இந்தியப் பிரதமர் சந்திர சேகரும் இம்மாவட்டத்தின் இப்ராஹிம்பட்டியில் பிறந்தவர்.
மொழிகள்
பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.[1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பலியா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,223,642.[2] இது தோராயமாக மூரித்தானியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 108வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,081 inhabitants per square kilometre (2,800/sq mi).[2] மேலும் பலியா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.73%.[2] பலியா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பலியா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.82%.[2]
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads