பாடி (இராகம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாடி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்:ச ரி11 ப நி3 ச்
அவரோகணம்:ச நி3 ப த1 ப ம1 ரி1 ச்

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். இதன் அவரோகணத்தில் பஞ்சமம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

  • Raga Padi - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads