பாலு மகேந்திரா நூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலு மகேந்திரா நூலகம் என்பது இலங்கையின், கிளிநொச்சியில் உள்ள திரைப்படத் துறைக்காக அமைக்கப்பட்ட இலாப நோக்கற்ற ஒரு சுயாதீன நூலகம் ஆகும்.[1]
Remove ads
வரலாறு
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொரோனா வைரசு பெருந்தொற்று நிலவிய காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இளைஞர்கள் ஒன்றிணைந்து பட்டறை என்ற பெயரில் திரைப்பட பயிற்சிப் பட்டறையை நிகழ்நிலை மூலமாக சுமார் நான்கு மாதங்கள் நடத்தினார்கள். இதில் இலங்கையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் பலர் இணையவழியில் கலந்து கொண்டனர். இதன் முடிவில் கிடைத்த உந்துதலின் விளைவாக 2020 செப்டம்பரில் இந்த நூலகம் துவக்கப்பட்டது. நூலகத்துக்கு ஈழத்தில் பிறந்து திரையுலகில் புகழ்பெற்றவரான பாலு மகேந்திராவின் பெயர் சூட்டப்பட்டது. இந்த நூலகத்தின் துவக்க விழாவின் நிகழ்நிலை வாயிலாக ஈரானிய இயக்குநர் மசித் மசிதி, சிங்கள திரைப்பட இயக்குநரான பிரசன்ன விதானகே, பாரதிராஜா, சீனுராமசாமி, இலங்கை நாடக ஆளுமையான மௌனகுரு சின்னையா, பி. எச். அப்துல் ஹமீட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நூலகம் துவக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 10,000 நூல்களும், குறுவட்டுகளும் சேகரிக்கப்பட்டன.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads