பிரபந்தம்
இடைக்கால இந்திய சமஸ்கிருத இலக்கியத்தின் ஒரு இலக்கிய வகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரபந்தம் (Prabandha) என்பது இடைக்கால இந்திய சமசுகிருத இலக்கியத்தின் ஒரு இலக்கிய வகையாகும். பிரபந்தங்களில் பிரபலமான நபர்களின் வாழ்க்கையைப் பற்றிய சில வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. அவை முதன்மையாக 13 ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் ( குசராத்து மற்றும் மால்வா ) சமண அறிஞர்களால் எழுதப்பட்டன.[1] பிரபந்தங்கள் பேச்சுவழக்கு சமசுகிருதத்தை வடமொழி வெளிப்பாடுகளுடன் கொண்டுள்ளது.[2] மேலும் நாட்டுப்புற பாரம்பரியத்திற்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன.[3]
இதன் கதைக்களம் மற்றும் அதன் கதை பாணி எந்த குறிப்பிட்ட விதிகளையும் பின்பற்றவில்லை. மத்திய கால குஜராத்தி இலக்கியத்தின் புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளாக பத்மநாபாவின் 'கன்ஹத்தே பிரபந்த்' மற்றும் லாவண்யாசமயசூரியின் 'விமல் பிரபந்த்' ஆகியவை அடங்கும். ஓரளவிற்கு புனைகதை மற்றும் புராணங்களின் அடிப்படையில் இருந்தாலும், ஆய்வுக் கட்டுரைகள் இடைக்கால சமூக மற்றும் கலாச்சார நிலைமைகளை ஆய்வு செய்வதற்கு பயனுள்ள ஆவணப் பொருட்களை வழங்குகின்றன.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads