பிரமிளா ராணி பிரம்மா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரமிளா ராணி பிரம்மா (Pramila Rani Brahma) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போடோ அரசியல்வாதியாவார். இவர் போடோலாந்து மக்கள் முன்னணியில் இருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் பிரமிளா அமைச்சரானார்.
கவுகாத்தியில் 20 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பிற்காக 1992 இல் கைது செய்யப்பட்ட பிரமிளா ராணி பிரம்மா 2014 ஆம் ஆண்டு காங்கிரசுடனான தனது உறவை முறித்துக் கொள்ளும் வரை தருண் கோகோய் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் வகுப்புவாத கலவரங்களுக்கு வழிவகுத்தன. பிரமிளா தொடர்ந்து ஆறாவது முறையாக கோக்ராஜர் கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads