பிரெடிரிக் சிலுபா

இரண்டாவது சாம்பிய அரசுத்தலைவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரெடிரிக் ஜேகப் டைடஸ் சிலுபா ( Frederick Jacob Titus Chiluba, ஏப்ரல் 30, 1943 – சூன் 18, 2011) சாம்பியாவின் அரசியல்வாதியும் 1991 முதல் 2002 வரை இரண்டாவது சாம்பிய அரசுத்தலைவராக பணியாற்றியவரும் ஆவார். தொழிற்சங்கத் தலைவரான சிலுபா நாட்டில் முதன்முதலாக பல கட்சிகள் பங்கேற்ற 1991ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் பல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்; இத்தேர்தலில் விடுதலை பெற்ற நாளிலிருந்து தொடர்ந்தும் நீண்டநாட்களும் குடியரசுத் தலைவராக இருந்த கென்னத் கவுண்டாவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டவமைப்பின்படி மூன்றாம் முறை சிலுபா 2001இல் போட்டியிட முடியாததால், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் லெவி முவனவாசா பல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். சிலுபாவின் பதவி விலகலுக்குப் பிறகு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது; நீண்டநாட்கள் நடந்த புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 2009ஆம் ஆண்டில் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் பிரெடெரிக் சிலுபா, 2வது சாம்பியாவின் அரசுத் தலைவர் ...
Remove ads

இறப்பு

சிலுபா சூன் 18, 2011 நள்ளிரவில் காலமானார்.[1] அவரது உதவியாளர் எம்மானுவல் முவாம்பா இதனை அறிவித்தார். சூன் 17 அன்று சிலுபா வழமையாக இயங்கியதாகவும் அவரது வழக்கறிஞர்களை சந்தித்ததாகவும் முவாம்பா கூறினார். பின்னதாக வயிற்றுவலியால் அவதியுற்றதாக கூறினார்.[1]

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads