பூரணசந்திரிகா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூரணசந்திரிகா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 ப த2ப ச் |
அவரோகணம்: | ச் நி3 ப ம1 ரி2 க3 ம1 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் ரிசபம், மத்திமம் என்பனவும் ஒழுங்குமாறி வருகின்றன. இதனால் இவ்விராகம் ஒரு வக்கிர இராகம் ஆகும்.
Remove ads
இசை வடிவங்கள்
- தில்லானா: தோம்தோம் தனை - ஆதி - இராமநாதபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார்.[2]
- கிருதி : தெலிசிராம - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : சங்க சக்கீர - ரூபகம் - முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி - ஆதி - முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : பாதமே துணை - ஆதி - கோபால கிருஷ்ண பாரதியார்.
- கிருதி : இன்னம்தான் பாராமுகமோ - ஆதி - வேதநாயகம் பிள்ளை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads