பெண்ணடிமைத்தனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண்ணடிமைத்தனம் என்று குறிக்கப்படுவது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சமவுரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் குறிக்கிறது. சில சமூகங்களைத் தவிர பெரும்பான்மைச் சமூகங்கள் நெடுங்காலமாக ஆண் ஆதிக்க சமூகங்களாகவே இருந்து வந்துள்ளன. அனேக சமூகங்களில் பெண்களின் மனித, உளவியல், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களுக்கு இணையாக அமையவில்லை. பல சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு பணி செய்யும் அல்லது ஆண்களின் கட்டுப்பாடுகளுக்குரிய அல்லது ஆண்களை சார்ந்து இருக்கும் மனிதர்களாகவே அடிமைத் தனமாக பயன்படுத்தப்பட்டார்கள். சுதந்திரங்கள் அற்றவர்களாகவும், ஆண் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலையை பெண்ணடிமைத் தனம் எனலாம்.
பெண்களுக்கு சொத்துரிமை, கல்வியுரிமை, வேலையுரிமை, பேச்சுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் இருக்கவில்லை. இதனால் பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் என பல வழிமுறைகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. தற்காலத்தில் பெண்களின் நீண்ட போராட்டத்தின் பின்பு இந்த நிலை பெருதும் மாறிவருகின்றது.
Remove ads
தமிழர் சமூகத்தில் பெண்ணடிமைத் தனம்
சங்க காலம்
- பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தனது பாடலில் (பொதுவியல் 246) உடன்கட்டையேறும் வழக்கம் பற்றிப் பேசுகிறார்.
- சங்க கால ஒளவை 'எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று குறிப்பிடுகிறார்.
- 'இற்பரத்தை, சேரிப்பரத்தை, காமப் பரத்தை, காதல் பரத்தை' என தொல்காப்பியர்கால 'பரத்தைவகைகள்' குறிப்பிடப்படுகிறார்கள்.
- 'வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என்பது குறுந்தொகை (பாடல் 135).
- பெண்கள் கடல் கடந்து செல்லக் கூடாது என்ற வழக்கம் இருந்ததாக 'முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை' என்று தொல்காப்பியம் குறிக்கிறது.
- ஆத்தி சூடி 63 வது வரியில் "தையல் சொல் கேளேல்" என்று பிற்கால ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.
Remove ads
படக் காட்சியகம்
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads