மன்னார்குடி பரமசிவம் பிள்ளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மன்னார்குடி பரமசிவம் பிள்ளை (21 ஆகஸ்ட் 1929 – 23 ஆகஸ்ட் 1976) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

பரமசிவம் பிள்ளை, இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். பெற்றோர்: சண்முகம் பிள்ளை – நாகரத்தினம் அம்மாள். தனது ஏழாவது வயதில் திருப்பழனம் பொன்னையா என்பவரிடம் மாணவராகச் சேர்ந்த பரமசிவம், அவரிடம் 5 ஆண்டுகள் நாதசுவரம் கற்றுக்கொண்டார். அதன்பிறகு சுவாமிமலை கந்தசுவாமி பிள்ளையிடம் 3 ஆண்டுகள் நாதசுவரம் கற்றுக்கொண்டார்.

இசை வாழ்க்கை

1970ஆம் ஆண்டு தில்லியில் வாசித்தபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதலைப் பெற்றார். முதலாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, தொடக்க விழாவில் பரமசிவம் பிள்ளையின் நாதசுவர நிகழ்ச்சி நடந்தது.

புகழ்பெற்ற தவில் கலைஞர்களான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல், திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, தஞ்சாவூர் கோவிந்தராஜன் ஆகியோர் இவருக்கு தவில் வாசித்துள்ளனர்.

Remove ads

பெற்ற பட்டங்களும், விருதுகளும்

  • நாகஸ்வர வித்வன்மணி
  • நாகஸ்வர கேஸரி

மறைவு

பரமசிவம் பிள்ளை, 23 ஆகஸ்ட் 1976 அன்று தனது 47ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக காலமானார்.

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads