மறவர் (இனக் குழுமம்)
முக்குலத்தோரில் ஒரு சாதியினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மறவர் (Maravar) (மறவன் மற்றும் மறவா எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர்.[1]
Remove ads
பெயர்க்காரணம்
தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி போர் புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர்.[சான்று தேவை]
Remove ads
மக்கள்தொகை
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்டோர் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர்.[2]
மரபு
செவிவழி கருத்துகளின்படி இராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர், இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (இராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக இராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே "சேதுபதி மன்னர்" என்ற பெயரும் பெற்றார் .
இராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி இராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகின்றனர். அந்த வகையில் மறவர்கள் இராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் பூலித்தேவன் மறவர் இனத்தில் தொன்மையான, செம்ம நாட்டு மறவர் குலத்தை சேர்ந்தவர்.[3] செம்ம நாட்டு மறவர்கள் தமக்கை மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் உடையவர்கள். செம்ம நாட்டு மறவரினப்பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளவர்கள்.
மறவர்கள் உட்பிரிவுகள்
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
- அகத்தா கோட்டை மறவர்.
- கொண்டையன் கோட்டை மறவர்.
- கருதன் கோட்டை மறவர்.
- செக்கோட்டை மறவர்.
- அணில் ஏறாக்கோட்டை மறவர்.
- உப்புக் கோட்டை மறவர்.
- செவ்வேற் கோட்டை மறவர்.
மறவர் ஜமீன்கள்
திருநெல்வேலி
- சேத்துர் - ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
- சிங்கம்பட்டி - நல்லகுட்டி தீர்த்தபதி
- கொல்லம்கொண்டன் - வீரபுலி வாண்டாய தேவர்
- கங்கைகொண்டன் - சிவதுரை சோழக தேவர்
- சுரண்டை - வெள்ளைதுரை பாண்டிய தேவர்
- ஊர்க்காடு - சேது ராம தலைவனார்
- தெங்காஞ்சி - சீவல மாறன்
- வடகரை - சின்னஞ்சா தலைவனார்
- திருக்கரங்குடி - சிவ ராம தலைவனர்
- ஊற்றுமலை - ஹிருதலய மருதப்ப பாண்டியன்
- குமாரகிரி - குமார பாண்டிய தலைவனார்
- நெற்கட்டன் செவ்வல் - வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
- கொடிகுளம் - முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
- கடம்பூர் - சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்
- மணியாச்சி - தடிய தலைவனார் பொன் பாண்டியன்
- குற்றாலம் - குற்றால தேவன்
- புதுகோட்டை(திருநெல்வெலி) - சுட்டால தேவன்
- குருக்கள்பட்டி - நம்பி பாண்டிய தலைவனார்
- தென்கரை - அருகு தலைவனார்
- நடுவகுறிச்சி - வல்லப பாண்டிய தேவர்
இராமநாதபுரம்
- பாலவனத்தம் - பாண்டி துரை தேவர்
- பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
- படமாத்துர் - வேங்கை உடையன தேவர்
- கட்டனூர் - தினுகாட்டுதேவர்
- அரளிகோட்டை - நல்லன தேவர்
- செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
- கார்குடி - பெரிய உடையன தேவர்
- செம்பனூர் - ராஜ தேவர்
- கோவனூர் - பூலோக தேவர்
- ஒரியுர் - உறையூர் தேவர்
- புகலூர் - செம்பிய தேவர்
- கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
- சாயல்குடி - சிவஞான பாண்டியன்
- ஆப்பனூர் - சிறை மீட்ட ஆதி அரசு தேவர்.
Remove ads
மறவர் தற்போதும் உள்ள மன்னர் குடும்பங்கள்
- இராமநாதபுரம் - சேதுபதி
- சிவகங்கை - கௌரி வல்லப உடையார் தேவர்
- பூழி நாட்டு மன்னர்கள்
குறிப்பிடத்தக்க நபர்கள்
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - சுதந்திரப் போராட்டத் தியாகி.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads