மாசாத்துவான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாசாத்துவான் கோவலனின் தந்தை. புகார் நகரில் வாழ்ந்த செல்வன். அரசன் மதிக்கும் செல்வம் படைத்தவன். தனக்கு வருவாயாகக் கிடைக்கும் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படும்படிச் செய்பவன். [1] தன் மகன் கோவலனை பாண்டியன் கொலை செய்தான் என்பது கேட்டு வருந்தினான். சம்பந்தி மாநாய்கனும் தானும் தம்மிடம் இருந்த செல்வங்களை யெல்லாம் தானமாகக் கொடுத்துவிட்டு இருவருமாகத் துறவு பூண்டனர். [2]
மேற்கோள் குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads