மார்த்தாண்ட சிங்கையாரியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவனான மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325 முதல் 1348 வரையான காலப்பகுதியை அண்டி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் முடி சூட்டிக் கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது எனினும் இடைக் காலத்தில், யாழ்ப்பாண அரசின் பெருநிலப் பகுதியின் பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த வன்னியர் கலகம் செய்யலாயினர். இக் கலகங்களை மார்த்தாண்டன் இலகுவாக அடக்கினான்.
நாட்டில் கல்வி, வேளாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவன் இரக்க குணம் கொண்டவனாக விளங்கினான். இவன் சுகவீனமுற்றுக் காலமானபோது நாட்டின் எல்லாத் தரப்பு மக்களும் இவனது இழப்புக்காக வர்ந்தினர்.
இவனை அடுத்து இவன் மகன் குணபூஷண சிங்கையாரியன் அரசனானான்.
Remove ads
வெளியிணைப்புகள்
- யாழ்ப்பாண வைபவமாலை பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் நூலகம் இணையத் தளத்திலிருந்து.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads