மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்)
Remove ads

மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலான வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத கருப்பு வெள்ளை மலையாளத் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத் துறையில் வெளியான இரண்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் திரைப்படம் இது[1][2].

இந்தக் கட்டுரை மலையாளத் திரைப்படம் பற்றியாகும், ஏனைய தகவல்களுக்கு மார்த்தாண்ட வர்மா என்ற பக்கம் பார்க்கவும்.
விரைவான உண்மைகள் மார்த்தாண்ட வர்மா, இயக்கம் ...
Remove ads

கதைப் பின்னல்

சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை.[1][2][3]

நடிப்பு

இத் திரைப்படத்தில் நடித்தவர்கள்[4]:

  • செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
  • எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
  • வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
  • பத்மினி - பாறுக் குட்டி
  • தேவகி
  • வி. சி. குட்டி
  • எச். வி. நாத்
  • சுந்தரம் ஐயர்

வெளியீடு

இந்தத் திரைப்படம் வெளியிட்டபோது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்குப் பிறகு இத்திரைப்படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப்படத்துறையில் மற்றும் இலக்கிய பதிப்பகத் துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கைப் பதிந்தது.

இத் திரைப்படத்தின் ஒரு பதிப்பு புனேயிலுள்ள தேசிய திரைப்பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது [5].

தென்னிந்தியாவில் வெளியான பேசாத கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இத்திரைப்படம் மட்டுமே பாதுகாக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads