மா. சந்திரமூர்த்தி
தொல்லியல் துறையில் இயக்குநராக பணியாற்றியவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மா. சந்திரமூர்த்தி (பிறப்பு: சூன் 19, 1946) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தொன்மை வரலாறு - தொல்லியல் முதுகலைப் பட்டமும், ஆவணக் காப்பியல் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தொல்லியல் துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அத்துறையின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 29 நூல்களையும், 11 ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். கருத்தரங்குகளில் பங்கு பெற்று ஆங்கிலத்திலும், தமிழிலுமாக 300 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் முனைவர் வெ. வேதாசலம் என்பவருடன் இணைந்து எழுதிய "பராக்கிரம பாண்டியபுரம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads