சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ளது. இது இந்திய அரசுக்குச் சொந்தமானது. 1965 இல் நிறுவப்பட்ட இதற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரான சௌதரி சரண் சிங்கின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இதன் முந்தைய பெயர் மீரட் பல்கலைக்கழகம் என்பதாகும்.
வளாகம்
இது 222 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விளையாட்டுக் கூடமும், ஆய்வுக்கூடங்களும், தாவரவியல் தோட்டங்களும் உள்ளன. மேலும், வளாகத்திற்குள்ளேயே உடற்பயிற்சிக் கூடமும், உள்ளரங்க விளையாட்டுத் திடலும், நூலகமும் விடுதி, கலையரங்கமும் உள்ளன.
துறைகள்
- உழவுத் துறை
- கலைத் துறை
- கல்வி
- பொருளியல்
- மருத்துவம்
- அறிவியல்
- பொறியியல்
- சட்டம்
- கற்பித்தல்
முன்னாள் மாணவர்கள்
- மாயாவதி, உத்தரப் பிரதேச முதல்வர்
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads