முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள்

From Wikipedia, the free encyclopedia

முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள்
Remove ads

முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் என்பன, முங்கோ ஏரிப் பகுதியில் கிடைத்த மூன்று தொகுதி மனித உடல் எச்சங்களைக் குறிக்கும். இவை முங்கோ ஏரி 1 (முங்கோ பெண்), முங்கோ ஏரி 2, முங்கோ ஏரி 3 (முங்கோ மனிதன்) என அழைக்கப்படுகின்றன. முங்கோ ஏரி, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில், குறிப்பாக உலக பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ள வில்லாந்திரா ஏரிப் பகுதியில் அமைந்துள்ளது.[1][2]

Thumb
முங்கோ ஏரிக்கரை.

முங்கோ ஏரி 1 1969ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பழைய தகனங்களுள் ஒன்று.[1][3] முங்கோ ஏரி 3 1974ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பிளீசுட்டோசீன் காலத்தில் 40,000 - 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆசுத்திரேலியத் தொல்குடி மனிதனுடையது. இவையே ஆசுத்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப்பழைய எச்சங்களாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads