முதலாம் கிடாரன்
கிடாரைட்டு மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் கிடாரன் (Kidara I; ஆட்சிக் காலம் பொ.ச. 350-390) கிடாரைட்டு இராச்சியத்தின் முதல் பெரிய ஆட்சியாளர் ஆவார். இவர் வடமேற்கு இந்தியாவில், குசான்சாகர், காந்தாரதேசம், காஷ்மீர் , பஞ்சாப் பகுதிகளில் ஆண்டுவந்த குசான-சாசானியர்களை அங்கிருந்து விரட்டினார். [4]
"கிடாரனின் குசான நாணயங்கள்
கிடாரைட்டுகளின் முதலாம் கிடாரனின் தங்க நாணயம், சுமார் 350–385 பொ.ச., பிராமி எழுத்துமுறையில் வலமிருந்து இடமாக:
குசானா (

கு-சா-னா)
கிடாரன் (

கி-டா-ரன்)
குசானன் (

கு-சா-னன்)
அர்தோக்சோ தேவி பின்பக்கம்.
குசானா (
கிடாரன் (
குசானன் (
அர்தோக்சோ தேவி பின்பக்கம்.
கிடாரைட் நாணயங்களின் கீழ் இடது மூலையில் பிராமி எழுத்துமுறையில் "குசானன்" என்ற எழுத்து (

'கு-சா-னன்') சுமார் 350 பொ.ச.[3]
Remove ads
ஆட்சி
கிடாரன் ஒரு நாடோடி ஆட்சியாளராக இருந்தார். இவர் குசான சாசானியர்களால் ஆளப்பட்ட பாக்திரியா ( துகாரிஸ்தான் ), காந்தாரம் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்தார். கிடாரைட்டுகள் ஆரம்பத்தில் சுமார் பொ.ச.300 -இல் வடக்கிலிருந்து சோக்தியானா , பாக்திரியா ஆகியவற்றின் மீது படையெடுத்ததாக கருதப்படுகிறது.[5]ஹெப்தலைட்டுகள் இடம்பெயர்ந்ததன் மூலம் இவரது மக்கள் பாக்திரியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம்.[4]
கிடாரனின் இனம் தெளிவாக இல்லை. ஆனால் இவர் ஒரு சியோனைட்டாக இருந்திருக்கலாம். மேலும் இவர் ஹூன அல்லது ஹூணர்களின் பொது வகையைச் சேர்ந்தவர்.[5] ஏற்கனவே 4-ஆம் நூற்றாண்டில், சாசானிய பேரரசர் இரண்டாம் சாபூர் மன்னர் கிரம்பேட்சு தலைமையிலான சியோனைட் படையெடுப்பாளர்களுக்கு எதிராக போராடினார். இறுதியில் அவர்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். அமிடா கோட்டை முற்றுகையில் உரோமானியர்களுக்கு எதிரான போரில் தங்கள் இராணுவத்தைப் பயன்படுத்தினார் (இப்போது தியார்பாகிர், துருக்கி ).[4] இருப்பினும், சீன ஆதாரங்கள், கிடாரைட்டுகள் குசானர்களின் மூதாதையர்களான யுவேஜியின் உறவினர்களை உருவாக்கும் லெஸ்ஸர் யுயெஷி என்று விளக்குகின்றன.[5]
துகாரிஸ்தான் மற்றும் கந்தாரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கிடாரன், அதுவரை குசான-சசானிய இராச்சியத்தின் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட குசான்ஷா என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார்.[4] இவ்வாறு இவர் வடமேற்கு இந்தியாவில் கிடாரைட்டுகளின் பெயரிடப்பட்ட புதிய வம்சத்தை நிறுவினார்.[5] கிடாரைட்டுகளும் தங்களை குசானர்களின் வாரிசுகள் என்று கூறினர். ஒருவேளை அவர்களின் இன அருகாமையின் காரணமாக இருக்கலாம்.[5]
Remove ads
நாணயம்
கிடாரன் தனது சொந்த பெயரில் நாணயங்களை வெளியிடுவதற்கு முன், (இப்பிராந்தியத்தின் தனது முன்னோடி ஆட்சியாளரான முதலாம் வராகரனைப் பின்பற்றி) சாசானிய பாணி தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் குசான பாணி தங்க நாணயங்களையும் வெளியிட்டார். [6] [7]
- சுமார் 350-365 பொ.ச. குசான சாசானிய மன்னன் முதலாம் வராகரின் தாக்கத்தில் வெளியிட்ட கிடாரனின் நாணயம். வலதுபுறமாக: ரிப்பன் மேல்நோக்கி பறக்கும் கிரீடம்.
பல்குவில் காணப்பட்ட நாணயம். - கிடாரனின் பெயரில் நாணயம், "கிடாரன், பெரிய குசான்ஷா". பொ.ச.388-க்கு முன் தேதியிட்ட தெப் மரஞ்சனில் காணப்பட்ட நாணய வகை.
- குசான-சாசானிய ஆட்சியாளர் வரகரன் குசான்ஷா பாணியில் கிடாரனின் நாணயம். ரிப்பன் மேல்நோக்கி பறக்கும் கிரீடம். காந்தாரத்தில் காணப்பட்டது.
- கிடாரனின் சொந்தப் பெயரில் வெளியிடப்பட்ட நாணயம். பிராமி எழுத்துமுறையில்:






கி-டா-ரா கு-ஷா-ன-ஷா ("குசானத்தின் கிடாரன் ").
Remove ads
இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
