மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்க்கசகாயேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள மூவலூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் காணப்படும் தேவார வைப்புத் தலம் ஆகும்.
Remove ads
அமைவிடம்
இத்தலம் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் உள்ளது.
இறைவன்,இறைவி
இத்தலத்தில் உறையும் இறைவன் மார்க்கசகாயேஸ்வரர். இறைவி மங்களநாயகி, சௌந்தரநாயகி.
மயிலாடுதுறை சப்தஸ்தானம்
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
- பங்கேற்கும் பிற ஆறு கோயில்கள்
- அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்
- மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்
- கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
- சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்
- துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
- சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads