மேற்கதுவாய்

ஒரு வகை தொடை விகற்பமாகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேற்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)

சீர்களின் அமைப்பு

செய்யுளின் அடியில் ஈற்றுச்சீரைத்தவிர 1, 3 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெறின் மேற்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.

தொடை விகற்ப வகைகள்

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  1. மேற்கதுவாய் மோனைத் தொடை
  2. மேற்கதுவாய் இயைபுத்தொடை
  3. மேற்கதுவாய் எதுகைத்தொடை
  4. மேற்கதுவாய் முரண் தொடை
  5. மேற்கதுவாய் அளபெடைத்தொடை

எடுத்துக்காட்டுகள்

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா" (நல்வழி, ஔவையார்)

மேற்கண்ட செய்யுளில் முதலடியில் முதல், மூன்றாம் மற்றும் நான்காம் சீர்கள் 'ப' கொண்டு தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் மேற்கதுவாய் மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.



Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads