ராக்காயி அம்மன் கோயில்
மதுரை மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராக்காயி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகர் மலை காப்புக் காட்டில் அமைந்த அம்மன் கோயிலாகும். இக்கோயில் மதுரை நகரத்திலிருந்து வடக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

அழகர்மலை மீதமைந்த பழமுதிர் முருகன் கோயிலுக்கு சிறிது தொலைவில் உள்ள அழகர் மலையில் ராக்காயி அம்மன் சன்னதி உள்ளது. இராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள தொட்டியில் விழும் தீர்த்தத்தின் பெயர் நூபுர கங்கை தீர்த்தம் ஆகும். இதனை சிலம்பாறு என்பவர்.[1]
ராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து நீர் எடுத்து அழகருக்கு அன்றாடம் அபிசேகம் செய்வர். இக்கோயிலின் தல ஜோதி விருட்சம் ஆகும். இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும்.[2][3]
Remove ads
போக்குவரத்து
மதுரை மாநகரிலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள், வாடகை வண்டிகள் மூலம், பழமுதிர்சோலை முருகன் கோயில் வழியாக ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads