வஞ்சித்தளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஞ்சித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரும் தளைகளில் ஒன்று. இது 'கனி' வாய்பாட்டில் முடியும் சீரோடு 'நேர்' அல்லது 'நிரை' அசையில் தொடங்கும் சீர் வந்து தளையும் முறை.
- வஞ்சித்துறைப் பாடல்
- 1
'மைசிறந்தன | மணிவரை [1] |
கைசிறந்தன | காந்தளும் [2] |
பொய்சிறந்தனர் | காதலர் |
மெய்சிறந்திலர் | விளங்கிழாய்.'[3] |
- இந்த வஞ்சித்துறைப் பாடலில் இந்த வஞ்சித்தளை பயின்று வந்துள்ளதைத் காணலாம்.
- வஞ்சித் தாழிசைப் பாடல்கள்
- 1
'மடப்பிடியை | மதவேழம் |
தடக்கையான் | வெயின்மறைக்கும். |
இடைச்சுர | மிறந்தார்க்கே |
நடக்குமென் | மனனேகாண். |
- 2
'பேடையை | யிரும்போத்துத் |
1தோகையால் | வெயின்மறைக்கும் |
காடக | மிறந்தார்க்கே |
ஓடுமென் | மனனேகாண். |
- 3
'இரும்பிடியை | யிகழ்வேழம் |
பெருங்கையான் | வெயின்மறைக்கும் |
அருஞ்சுர | மிறந்தார்க்கே |
விரும்புமென் | மனனேகாண்.' [4] |
- இந்த வஞ்சித் தாழிசைப் பாடல்களில் இந்த வஞ்சித்தளையினைக் காணலாம்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads