வடநெடுந்தத்தனார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வடநெடுந்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 179. நாலைகிழவன் நாகன் என்பவனின் வல்லாண்மை இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1]

வல்லாண்முல்லை செய்தி

வாகைத்திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் இதனை வல்லாண் பக்கம் என்று குறிப்பிடுகிறது.[2] வேலேந்திப் பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது வல்லாண் பக்கம். வல்லமையைக் காட்டும் ஆண்மைப் பகுதி என்பது இதன் பொருள். நாலை கிழவன் பாண்டிய அரசனின் போர்மறவன். இவன் பாண்டியனுக்குப் படை தேவைப்பட்டபோது வாள்வீரர் படைத் திரட்டித் தந்தான். இதனால் இவனது செயல் வல்லாண் பக்கம் ஆயிற்று.

புறப்பொருள் வெண்பாமாலை இதனை வல்லாண் முல்லை என்று குறிப்பிடுகிறது.[3]

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads