வலிவல மும்மணிக்கோவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வலிவல மும்மணிக்கோவை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான் என்னும் கருத்துப் பாடலை [2] இவரது பாடல் [3] வழிமொழியும் ஒப்புமைப் பாங்கில் உள்ளதால் இந்த நூல் அந்த நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. திருவலிவலம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடும் நூல் இது.
Remove ads
பாடல் - எடுத்துக்காட்டு
(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது) சிவ-சின்னம்
- முண்டத்து இலங்கும் வெண் திருநீறும்
- எண்தரு சிறப்பில் கண்ணிகை மாலையும்
- ஓதும் அஞ்செழுத்தின் உண்மை செஞ்சு அழுத்தலும்
- ஒடியா நேயமும்
கம்பராமாயணம் அடிகளை [4] ஒற்றிப் பாடப்பட்ட பாடல்
- அன்று எனின் அன்றாய் அம் எனின் அதுவாய்
- ஒன்று எனின் ஒன்றாய் பல எனின் பலவாய்
- நின்றது உன் நிலைமை.
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads