வலிவல மும்மணிக்கோவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வலிவல மும்மணிக்கோவை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான் என்னும் கருத்துப் பாடலை [2] இவரது பாடல் [3] வழிமொழியும் ஒப்புமைப் பாங்கில் உள்ளதால் இந்த நூல் அந்த நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. திருவலிவலம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடும் நூல் இது.

Remove ads

பாடல் - எடுத்துக்காட்டு

(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது) சிவ-சின்னம்

முண்டத்து இலங்கும் வெண் திருநீறும்
எண்தரு சிறப்பில் கண்ணிகை மாலையும்
ஓதும் அஞ்செழுத்தின் உண்மை செஞ்சு அழுத்தலும்
ஒடியா நேயமும்

கம்பராமாயணம் அடிகளை [4] ஒற்றிப் பாடப்பட்ட பாடல்

அன்று எனின் அன்றாய் அம் எனின் அதுவாய்
ஒன்று எனின் ஒன்றாய் பல எனின் பலவாய்
நின்றது உன் நிலைமை.

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads