வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் வளசரவாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4] இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் ஆவர். இறைவி திரிபுரசுந்தரி தாயார் ஆவார். மேலும், இக்கோயிலின் தலவிருட்சம் வன்னி மரம் மற்றும் தீர்த்தம் சுக்ர தீர்த்தம் ஆகும்.

விரைவான உண்மைகள் வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13.041465°N 80.177610°E / 13.041465; 80.177610 ஆகும்.

அகத்தீசுவரர் சன்னதி, வேள்வீசுவரர் சன்னதி, திரிபுரசுந்தரி சன்னதி, கோதண்டராமர் சன்னதி, வினை தீர்த்த விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதி, கருமாரி அம்மன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, நவக்கிரக சன்னதி, பைரவர் சன்னதி ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads