வைசம்பாயனர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வைசம்பாயனர் என்பார் பழங்கால இந்தியாவின் சமசுக்கிருத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு முனிவர் ஆவார். மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவரான இவர் யசுர் வேதத்தைக் கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர் ஜெயம் என்ற தலைப்பில் 8,800 அடிகளுடன் கூடிய தொடக்ககால மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் சீடர் என்றும் நம்பப்படுகின்றது. வைசம்பாயனர் தனது குரு எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி சனமேசயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். அவ்வமயம் வைசம்பாயனர் எடுத்டுரைத்த மகாபாரதக் கதையை கேட்ட உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். ஜெயம் என்ற இதிகாசம் பின்னாளில் பாரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரிவம்சம் என்னும் புராணத்தை இவரே இயற்றியதாகத் தெரிகிறது.


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads