ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்

பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஆன்மீக சமூகம் (ஆசிரமம்) From Wikipedia, the free encyclopedia

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்map
Remove ads

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் (Sri Aurobindo Ashram) என்பது புதுச்சேரியிலுள்ள ஆன்மீக மையமாகும். 1910 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து விலகிய பின்னர், பாண்டிச்சேரியில் குடியேறிய அவரும், அவரைச் சார்ந்த குழுவாலும் இந்த ஆசிரமம் உருவாக்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டு நவம்பர் 24, அன்று, ஸ்ரீ அரவிந்தர் ஒரு பெரிய ஆன்மீக உணர்தலுக்குப் பின்னர், ஆன்மீக வேலைகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஆன்மீக ஒத்துழைப்பாளரான "அன்னை"க்கு ஆசிரம நிர்வாகத்திற்கான முழுப்பொறுப்புகளையும் வழங்கினார். அவர் முன்பு மிரா அல்ஃபாஸா என அழைக்கப்பட்டார். ஆகையால் இந்த நாள் பொதுவாக ஆசிரமத்தை நிறுவும் தினமாக அறியப்படுகிறது. இருப்பினும், ஸ்ரீ அரவிந்தோ எழுதியது போலவே, "தன்னை மையமாக வைத்து வளரும் ஒரு நிலையமாகும்" .[1]

விரைவான உண்மைகள் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், துவங்கியது ...
Thumb
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்
Remove ads

தொடர்புடைய நிறுவனங்கள்

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் ஓர் இடம் மட்டுமே. இதற்கு எந்த கிளைகளும் இல்லை. (ஸ்ரீ அரவிந்த் ஆசிரமம் - தில்லி கிளை ஒரு தனி அமைப்பு ஆகும். அது வேறு ஒரு நிர்வாகத்தால் இயக்கப்படுகிறது.) பாண்டிச்சேரி மற்றும் இதர இடங்களில் உள்ள பல அமைப்புகள் "ஸ்ரீ அரவிந்தோ" என்று பெயரிடுகின்றன. ஆனால் அவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஸ்ரீ அரவிந்தரால் நிறுவப்பட்ட மிக முக்கியமான அமைப்பு ஆரோவில் என்பதாகும். இது அன்னை நிறுவிய ஒரு சர்வதேச நகரமாகும். இது மனித ஒற்றுமைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

Remove ads

ஆரம்பகால வரலாறு

ஆசிரமத்திற்கு முந்தைய கால வாழ்க்கை முறைசாராததாக இருந்தது. ஸ்ரீ அரவிந்தர் தனது பெரும்பாலான நேரங்களை எழுத்து மற்றும் தியானத்தில் கழித்தார். 1910 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்திருந்த மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் அவருடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் விரும்பியபடி செய்ய அவர்கள் சுதந்திரமாக இருந்தனர். அன்னை மற்றும் பிரஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்ட் 1914 ஆம் ஆண்டில் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து ஒரு மாதாந்திர ஆய்வுகளை வெளியிட்டனர். ஆனால், முதல் உலகப் போர் வெடித்த பிறகு, அவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்றும் ஸ்ரீ அரவிந்தரே இந்த ஆய்வு முழுவதிலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அவருடன் வசிக்கும் இளைஞர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்றார். ஏப்ரல் 1920 இல், அன்னை பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். விரைவில் இச்சமூகம் ஓர் ஆசிரமத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டது. மேலும்,"அன்னை தன் வாழ்நாள் முழுமையையும் ஆசிரமத்திற்காகவும், ஸ்ரீஅரவிந்தருக்காகவும் ஒப்படைத்தார்."[2] 1926 ஆம் ஆண்டில் ஆசிரமத்திற்கு முறையான வடிவம் கொடுக்கப்பட்ட பின்னர், அது விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது 1927 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 24 ஆகவும் 1934 இல் 150 க்கும் அதிகரித்தது.[3] 1934 ஆம் ஆண்டுகளில் தேவையான வசதிகள் இன்றியே ஆசிரமம் இருந்தது. இந்த ஆண்டுகளில் அன்னைக்கு ஒரு வழக்கமான பழக்கம் இருந்தது. அவர் தினமும் காலை 6 மணியளவில், பலகணியில் நின்று தனது ஆசீர்வாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தினமும் தனது நாளை துவங்கினார். ஆசிரமத்திலுள்ள பக்தர்கள் காலை அன்னையின் ஆசி பெற்று, பின் தியானம் உட்பட பல யோகாசனங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[4]

பல துறைகளைக் கொண்டு ஆசிரமம் பெருவளர்ச்சி பெற்றது. பல துறைகள் அவற்றில் செயல்படுகின்றன. அவை : அலுவலகங்கள், நூலகம், சாப்பாட்டு அறை, புத்தகம் / புகைப்படம் அச்சிடுதல், பட்டறைகள், விளையாட்டு / விளையாட்டு மைதானம், கலைக்கூடம், மருந்தகம் / செவிலியர்கள் வீடு, பண்ணைகள், மலர் தோட்டங்கள், விருந்தினர் இல்லங்கள், சலவை, பேக்கரி போன்றவை. துறையின் தலைவர்கள் காலை அன்னையை சந்தித்து அவளுடைய ஆசீர்வாதங்களையும் உத்தரவுகளையும் பெற்றுக் கொண்டனர். காலை 10 மணியளவில் அவர் மீண்டும் அனைவரையும் சந்திப்பார். மாலை 5.30 மணியளவில் அவர் தியானம் மேற்கொள்வார். மேலும், ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் ஆண்டுதோறும் நான்கு முறை பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவர். ஆசிபெற வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை புரிவர்.

Remove ads

தற்போதைய நிலை

Thumb
ஆசிரமத்தினுள் செல்ல மக்கள் வரிசையில் நிற்கும் காட்சி

பாண்டிச்சேரிக்குள் செல்லும் போது ஒவ்வொரு கட்டடங்களும் ஆசிரமத்தின் வளர்ச்சி, பெருமைகள் குறித்து எடுத்துக்கூறும். இன்று ஆசிரமத்திற்கு சொந்தமான 400 க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். ஆனால் மக்கள் அதிகம் தேடி வருவது ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் வாழ்ந்து கொண்டிருக்கும் மையமே ஆகும். அவர்கள் வாழ்ந்த இல்லமே - "ஆசிரம பிரதான கட்டிடம்" அல்லது பொதுவாக "ஆசிரமம்" என்று அழைக்கப்படுகிறது. அவ்வில்லத்தின் உள்ளே ஒரு மரத்தாலான நிழல் முற்றத்தில், மலர் மூடப்பட்ட "சமாதி" உள்ளது. இந்த வெள்ளை பளிங்கு சன்னதியின் இரண்டு தனி அறைகளில், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இன்று, ஆன்மீக தேடல்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் புதுச்சேரி முக்கிய இடமாக மாறியுள்ளது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். பார்வையாளர்கள் பார்வையிடும் நேரம் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையாக உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads