1879
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1879 (MDCCCLXXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 11 - ஆங்கிலோ-சூலு போர் ஆரம்பமானது.
- ஜனவரி 22 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசட்னெல்வாஅனாவில் வைத்து பிரித்தானியப் படைகளைப் படுகொலை செய்தனர்.
- பெப்ரவரி 27 - சக்கரீன் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 12 - ஆங்கிலோ-சூலு போர்: நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
- மார்ச் 28 - ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
- மார்ச் 29 - ஆங்கிலோ-சூலு போர்: கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
- மே 3 - யாழ்ப்பாணம், கரவெட்டியில் இந்துக் கோயில் ஒன்றில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர்.
- ஜூலை 4 - ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 21 - தொமஸ் அல்வா எடிசன் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 13½ மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரக்கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.
- டிசம்பர் 28 - ஸ்கொட்லாந்து, டண்டீ என்ற இடத்தில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றைக் கடந்த வேளையில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 31 - நியூ ஜேர்சியில் வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- தமிழில் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் வெளி வந்தது.
- வில்லியம் குறூக்ஸ் என்பவர் மின்இறக்கக் குழாய் ஆய்வுகளின்போது பொருளின் நான்காவது நிலையை (பிளாஸ்மா) அடையாளம் கண்டார்.
- எட்வின் ஹோல் என்பவரால் ஹோலின் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜோசெப் ஸ்டெஃபான் என்பவரால் ஸ்டெஃபான்-போல்ட்ஸ்மன் விதி கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
- பெப்ரவரி 13 - சரோஜினி நாயுடு, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1949)
- பெப்ரவரி 22 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (இ. 1947)
- மார்ச் 14 - அல்பர்ட் ஐன்ஸ்டீன், அறிவியலாளர் (இ. 1955)
- ஜூலை 27 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)
- செப்டம்பர் 17 - ஈ. வெ. ராமசாமி, பெரியார் (இ. 1973)
- நவம்பர் 7 - லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சியப் புரட்சியாளர் (இ. 1940)
- டிசம்பர் 30 - இரமண மகரிஷி
இறப்புகள்
- மே 4 - சேர் முத்து குமாரசாமி, இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
- ஆகஸ்ட் 27 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
- டிசம்பர் 5 - ஆறுமுக நாவலர், ஈழத்து சைவ அறிஞர் (பி. 1822)
1879 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads