6 அத்தியாயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
6 அத்தியாயம் என்பது 2018ஆம் ஆண்டு வெளிவரவுள்ள ஒரு திகில் தொகைத் திரைப்படமாகும். இதில் அடங்கியுள்ள ஆறு குறும்படங்களும் வெவ்வேறு இயக்குநர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஆஸ்கி மீடியா ஹட் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் 23 பிப்ரவரி 2018 அன்று வெளிவர உள்ளது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
Remove ads
தயாரிப்பும் வெளியீடும்
இப்படத்தை ஆஸ்கி மீடியா ஹட் சார்பாக சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு இது முதல் படமாகும். இதில் பணிபுரிந்திருக்கும் இயக்குநர்கள் பலர் திரைத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் எனினும், கேபிள் சங்கர் தவிர மற்றோருக்கு இது அவர்கள் இயக்கும் முதல் படமாகும். கேபிள் சங்கர் [[தொட்டால் தொடரும்]] எனும் படத்தை இதற்கு முன் இயக்கியுள்ளார். அதில் நடித்த [[தமன் குமார்]] இப்படத்திலும் நடித்துள்ளார்.
முன்னணி எழுத்தாளர் அஜயன் பாலா இதில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன் சென்னையில் ஒரு நாள், வனயுத்தம், மனிதன் ஆகிய படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் இயக்குநர்களின் ஒருவரான லோகேஷ் ராஜேந்திரன், சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். மர்ம தேசம் விடாது கருப்பு தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.
இப்படத்தின் ஒலிப்பேழை வெளியீடு அக்டோபர் 30, 2017 அன்று நடைபெற்றது. அதில் முன்னணி இயக்குநர்கள் சேரன், ஏ. வெங்கடேஷ், பார்த்திபன், வெற்றிமாறன், அறிவழகன், மற்றும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.[1]
Remove ads
கலைஞர்கள்
பொது
- தயாரிப்பாளர்: சங்கர் தியாகராஜன்
- தயாரிப்பு நிர்வாகர்: கேபிள் சங்கர்
- இசை (பாடல்): சி.எஸ். சாம்
- நடனம்: நந்தா
- காட்சி விளைவுகள்: வீ ஃபோகஸ் டிஜிடல் மீடியா
- ஒளிப்பதிவு (பாடல்): சி.ஜெ..ராஜ்குமார்
அத்தியாயங்களில்
Remove ads
திரைப்படத்திற்கான வரவேற்பு
இப்படம் பொதுவாக விமர்சகர்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளது. அவர்கள் பலரும் இம்முயற்சியின் புதுமையைப் பாராட்டினாலும் இயக்குநர்களின் திறமையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக திகில் படமாக இருந்தாலும், ஒவ்வொரு படமும் தனி கருத்தை கொண்டுள்ளதையும் இவற்றை இறுதியில் இணைத்திருந்த விதமும் தன்னை கவர்ந்த்தாக இயக்குநர் மீரா கதிரவன் கூறினார். மூத்த இயக்குநர் பாரதிராஜா இப்படம் தன்னை மிரள வைத்ததாகவும் இத்தகைய படங்களே தமிழ் திரைப்படங்களை உலக ரீதியில் கொண்டு செல்லும் என்றும் கூறியுள்ளார்.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads