அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்
Remove ads

</gallery> எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2 </gallery>

விரைவான உண்மைகள் அரியாலை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில், ஆள்கூறுகள்: ...

அரியாலை சித்திவிநாயகர் கோயில் யாழ்ப்பாணம் அரியாலையில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் (A9) சுமார் 100 மீட்டர் மேற்காக அமைந்துள்ளது. இதன் மூல விக்கிரமானது காசியில் இருந்து கச்சிக் கணேசையரால் கொண்டுவரப்பட்டதாகக் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. 1918 ஆம் ஆண்டு அட்வகேட் அருளம்பலம் இந்த ஆலயத்தை விரிவாக்க உதவினார். இந்த ஆலயம் அரியாலை சிவன் கோயில் உடன் அமைந்துள்ளது. இக்கோயிலை மகாத்மா காந்தி, யோகர் சுவாமிகள், குன்றக்குடி அடிகள் போன்ற பெரியார்கள் தரிசனம் செய்திருக்கின்றார்கள்.

இந்த ஆலயத்திற்குச் சொந்தமான வயல், தென்னந்தோப்புக்கள் ஆகியன உள்ளபோதிலும் தற்போதைய உள்நாட்டுப் பிரச்சினையால் இவை உள்ள கிழக்கு அரியாலைப் பகுதியை அணுகமுடியாமல் உள்ளது. இந்த ஆலயக் காணியிலேயே அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை, அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம், பொது அங்காடி (சந்தை), கமத்தொழில் நிலையம், சித்த ஆயுள்வேதநிலையம், தற்போது இயங்கா நிலையில் உள்ள பாலர் பாடசாலை, பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், நெசவு ஆலை ஆகியவை அமைந்துள்ளன.

Remove ads

வெளியிணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads