Map Graph

கொடிகாமம் தொடருந்து நிலையம்

கொடிகாமம் தொடருந்து நிலையம் இலங்கையின் வடக்கே கொடிகாமம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று கொடிகாமம் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் கொடிகாமம் ஊடாக யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது. இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.

Read article
படிமம்:Kodikamam_Railway_Station_-_Sri_Lanka.jpg