கெவாடியா தொடருந்து நிலையம்
கெவாடியா தொடருந்து நிலையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா எனும் சிற்றூரில் அமைந்துள்ள சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இது கெவாடியாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3 நடைமேடைகளுடன் அமைந்த இந்த தொடருந்து நிலையம், கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டி, 17 சனவரி 2021 அன்று சுற்றுலாப் பயணிகளின் சேவைகளுக்கு திறக்கப்பட்டது. இத்தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை, புது தில்லி, சென்னை, அகமதாபாத், வாரணாசி, வடோதரா, ரேவா ஆகிய நகரங்களை இணைக்கிறது.
Read article