மனேந்திரகர்
மனேந்திரகர் (Manendragarh) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 செப்டம்பர் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்ட மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தைச் சுற்றிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 43 மனேந்திரகர் நகரத்தின் வழியாகச் செல்கிறது. இந்நகரத்தின் வழியாக ஹஸ்தேவ் ஆறு பாய்கிறது. இந்நகரத்தை சுற்றியுள்ள மலைக்காட்டில் அமிர்த தாரை அருவி உள்ளது.
Read article