ஷிங்கிள் நடவடிக்கை
ஷிங்கிள் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு நீர்நிலத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினைத் தவிர்த்து, அன்சியோ மற்றும் நெட்டூனோ பகுதிகளில் கடல்வழியாகத் தரையிறங்கி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றன. தரையிறக்கம் முடிந்த பின்னர் கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற நடந்த அன்சியோ சண்டை இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
Read article